என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சிலைகளுக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உருவப்படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, ஜெ.கருணாநிதி, எழிலன், மேயர் பிரியா, தமிழச்சி தங்க பாண்டியன் எம்.பி., கவிஞர் தமிழ்தாசன், பகுதி செயலாளர் அகஸ்டின் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதே போல் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






