என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒருவர் உயிரிழந்த விவகாரம்... சேலம் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்கள்- த.வெ.க.வினர் இடையே மோதல்?
    X

    ஒருவர் உயிரிழந்த விவகாரம்... சேலம் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்கள்- த.வெ.க.வினர் இடையே மோதல்?

    • தாக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சாட்டினர்.
    • தவெக கூட்டத்தின் போது மயங்கி விழுந்தார்.

    சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே, சில பத்திரிகையாளர்களுக்கும் தவெக தொண்டர்களுக்கும் இடையே மோதல். தவெக தொண்டர்கள் தங்களைத் தாக்க முயன்றதாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.

    மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரஜ் என்ற 37 வயது நபர், இன்று சேலத்தில் நடந்த தவெக கட்சியின் கூட்டத்தின் போது மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்த தவெக-வினர் மயங்கி விழுந்தவரை அங்கிருந்து மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவமனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    "தவெக நிகழ்ச்சியின் போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ உதவிக்காக அவர் அவசரமாக அழைத்து செல்லப்பட்டார், ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது" என்று போலீசார் தெரிவித்தனர்.


    Next Story
    ×