என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாடு வன்முறை காடாக மாறுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    தமிழ்நாடு வன்முறை காடாக மாறுவதை போர்க்கால அடிப்படையில் தடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

    • கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது.
    • ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்களுக்கும், பொதுமக்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பினை வழங்கி நாட்டை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காவல் துறைக்கு உண்டு. ஆனால், கடந்த 44 மாத கால தி.மு.க. ஆட்சியில் காவல் துறைக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது.

    காவல் துறை சார் ஆய்வாளர், காவலர், சிறை காப்பாளர், தீயணைப்புத் துறை வீரர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றதாகவும், அந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததாக காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுட்டிக்காட்டியதாகவும், இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவருடைய அறையில் தீப்பிடித்த

    தாகவும், இந்தத் தீவிபத்து தன்னை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், அவர் காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார். காவல் துறையில் உயர் நிலையில் உள்ள பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அவரே காவல் துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளிக்க வேண்டிய அலங்கோல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    இது ஒருபுறம் என்றால், மறுபுறம் ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலை நீடித்தால், தமிழ்நாடு வன்முறைக் காடாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன். இதனைத் தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×