என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை - ஓ.பி.எஸ்.
- கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* விரைவில் தனது தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளேன்.
* அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றியதே பா.ஜ.க. தான் என்று இ.பி.எஸ். கூறியிருப்பதற்கு நல்ல ஒரு விளக்கத்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






