என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உருவாகிறது புயல்... சென்னையில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
- வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.
இந்த நிலையில், மேற்கு- மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். மத்திய வங்கக்கடலில் 26-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 27-ந்தேதி சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.
அதன்படி, வங்காள விரிகுடாவில் புயல் உருவாக வாய்ப்புள்ளது. இந்த புயலானது ஆந்திரா நோக்கி சென்றாலும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






