என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புவிசார் குறியீடு பெற ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்.
- காக்கனூர் தொழிற்பேட்டையில் தொழில் பயிற்சி மையம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் 8951 பயனாளிகளுக்கு 34 கோடி ரூபாய் மானியத்துடன் 170 கோடி ரூபாய் கடன் ஒப்புதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு சிறு, குறு, நடுத்தர தொழில் துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-வது இடம்.
* பெரு நிறுவனங்கள் மட்டுமல்ல சிறுகுறு தொழில்கள் தமிழ்நாட்டை முன்னேற்றுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 5 அறிவிப்புகள்...
1. அறிவுசார் சொத்துரிமையான புவிசார் குறியீட்டுக்கான மானியம் ரூ.1 லட்சமாக வழங்கப்படும்.
2. காக்கனூர் தொழிற்பேட்டையில் தொழில் பயிற்சி மையம் ரூ.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
3. அம்பத்தூர் தொழில்பேட்டையில் செயல்படும் பாகம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆய்வகம் ரூ.5 கோடியில் நிறுவப்படும்.
4. சிறுகுறு நிறுவனங்களுக்கான காட்சிக்கூட கட்டண நிதியுதவி ரூ.1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக உயர்த்தப்படும்.
5. காஞ்சி பழந்தண்டலத்தில் சாலை கட்டமைப்பு, மழைநீர் வடிகால் அமைக்க ரூ.5 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






