என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.-வை தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
    X

    தி.மு.க.-வை தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    • தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.
    • SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    சென்னையில் தி.மு.க.வின் 75-வது அறிவுத்திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் தி.மு.க. தொடங்கப்படவில்லை.

    * ஒடுக்குமுறையில் இருந்து மக்களை மீட்ட இயக்கம் தி.மு.க. என எழுதி உள்ளார் ராகுல்காந்தி.

    * அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை கட்டமைக்க விரும்பும் இயக்கம் என்கிறார் கெஜ்ரிவால்.

    * தி.மு.க.வின் கருத்துக்கள் இன்று இந்தியா முழுவதும் பரவி விட்டது.

    * கியூபா புரட்சி வரை பத்திரிகையில் எழுதி மக்களின் சிந்தனையை திருத்திய மையமாக செயல்பட்டது தி.மு.க.

    * தி.மு.க. பெற்றுள்ள வெற்றி என்பது நாம் அடைந்த வரலாற்று சாதனை என்பது பலருக்கு தெரியவில்லை.

    * கொள்கை ரீதியாக தி.மு.க.வை வீழ்த்த முடியாமால் தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சி நடக்கிறது.

    * SIR-க்கு எதிராக சட்டரீதியாக போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.

    * தமிழகத்திற்குள்ளேயே தி.மு.க.வை முடக்க நினைத்தார்கள். ஆனால் நாம் இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறோம்.

    * தி.மு.க.வை அழிக்க நினைப்போரின் எண்ணம் என்றும் நிறைவேறாது. இது கூடிக் கலைகின்ற கூட்டமல்ல.

    * தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நேரத்தில் குழப்பதை ஏற்படுத்தவே SIR

    * களத்தில் பணியாற்றும் தி.மு.க.வினர் போலி வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * வாக்காளர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×