என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாள் - மு.க.ஸ்டாலின்
- அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.
- ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* வரலாற்றை மாற்றிய அம்பேத்கரின் பிறந்தநாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்.
* தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாள், அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாள்.
* அம்பேத்கர் எழுதிய சாதியை ஒழிக்க வழி என்ற நூலை தமிழில் வெளியிட்டவர் பெரியார்.
* சமூகத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை குற்றங்களுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றியவர் அம்பேத்கர்.
* ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை உயர வேண்டும் என்பதற்காகத்தான் சமத்துவ நாள் கொண்டாட்டம்.
* ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களை முதலில் எடுத்துக்கூறியவர் எம்.சி.ராஜா.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






