என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு - மு.க.ஸ்டாலின்
    X

    ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு - மு.க.ஸ்டாலின்

    • அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.
    • தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் கிராமக்கோவில் பூசாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எல்லாருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதற்கு உதாரணம் தான் இந்த விழா.

    * கோவிலுக்குள் அனைவரும் வரலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.

    * கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விடக்கூடாது என கூறியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.

    * அ.தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

    * இறைப்பற்றை பொறுத்தவரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேரறிஞர் அண்ணா சொன்னதுதான்.

    * நான் அதிகமாக கலந்துகொண்ட துறை நிகழ்ச்சி என்றால் அது அறநிலையத்துறையின் நிகழ்ச்சி தான்.

    * தி.மு.க. ஆட்சியில் 4,335 கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தில் 29 அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    * அறநிலையத்துறையில் 900-க்கும் அதிகமானவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    * 11 பெண்கள் உட்பட 41 ஓதுவார்களை நியமனம் செய்துள்ளோம்.

    * கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    * 8 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    * ஆன்மிக பற்றாளர்கள் விரும்பக்கூடிய அரசு தான் தி.மு.க. அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×