என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

லால்குடி, தொட்டியம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
திருச்சி:
லால்குடி பூவாளுர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையொட்டி லால்குடி நகர் பகுதியில் லால்குடி அரசு பொதுமருத்துவமனை, நாகம்மையார்தெரு, ராஜேஸ்வரிநகர், சாந்திநகர், பூவாளூர், பின்னவாசல், தென்கால், மணக்கால், கொப்பாவளி, வழுதியூர், நடராஜபுரம், படுகை, மேட்டாங்காடு, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், கீழ்அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், அம்மன்நகர், காட்டூர், ராமநாதபுரம், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூர், பெருவளநல்லூர், நஞ்சை, சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி மற்றும் இருதயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என லால்குடி செயற்பொறியாளர் அன்புசெல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தொட்டியம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தொட்டியம், அரங்கூர், கமலாபுரம், பாலசமுத்திரம், தோளுர்பட்டி, எம்.புத்தூர், ஏலூர்பட்டி, எம்.களத்தூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி, தலமலைப்பட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், காடுவெட்டி, முருங்கை, ஸ்ரீராமசமுத்திரம், உன்னியூர்,
கொளக்குடி, அம்மன்குடி, பூலாஞ்சேரி, அப்பணநல்லூர், தும்பலம், நாடார்காலணி, சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி செயற்பொறியாளர் ரவிராம்தாஸ் தெரிவித்து உள்ளார்.






