என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கருணாநிதி நினைவுநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
    X

    கருணாநிதி நினைவுநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

    • கருணாநிதி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சென்ற அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் கருணாநிதியின் சிலைகளுக்கும், உருவப்படத்திற்கும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    சென்னையில் அண்ணா சாலையில் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மு.க. தமிழரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    அதன் பிறகு ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதியின் நினைவிடம் நோக்கி அனைவரும் நடந்து சென்றனர்.

    இந்த அமைதிப் பேரணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், மு.க.தமிழரசு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி எம்.பி., ஆ.ராசா, ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன்,

    அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர், பெரிய கருப்பன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, தயாநிதி மாறன் எம்.பி., மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு, மயிலை த.வேலு, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர், மாதவரம் சுதர்சனம், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா,

    சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, தி.நகர் ஜெ.கருணாநிதி, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, பரந்தாமன், பல்லாவரம் இ.கருணாநிதி, எபிநேசர், ஐட்ரீம் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. மீ.அ.வைத்தியலிங்கம், தமிழ்மணி, பகுதி செயலாளர் மதன் மோகன்,

    துணை மேயர்கள் மகேஷ் குமார், தாம்பரம் கோ.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ், சந்திரன், குணாளன், தி.நகர் ஏழுமலை, பம்மல் வே.கருணா நிதி, பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், பட்டூர் ஜபருல்லா,

    தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தமிழ் மாறன், திருவல்லிக்கேணி வி.பி.மணி, அண்ணா நகர் ராமலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், வர்த்தக அணி செயலாளர் பாண்டிச் செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் அமைதிப் பேரணியில் நடந்து சென்றனர்.

    1½ கி.மீ. தூரம் நடை பெற்ற இந்த பேரணி மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தை அடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதே போல் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

    அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×