என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா 3-ந்தேதி சென்னை வருகை
- பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.
- பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை:
பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ந்தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பா.ஜ.க. மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா்.
மேலும், பா.ஜ.க. தலைவா்களை தனித்தனியாக சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி வியூகம் குறித்து கலந்தாலோசனை நடத்துகிறாா்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அவா், கட்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளாா்.
அவரது வருகையையொட்டி பா.ஜ.க. முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி சென்றுள்ள தமிழக பா.ஜ.க. தலைவா் நயினாா் நாகேந்திரன், பிரதமா் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளாா்.
அவா்களது ஆலோசனை படி பா.ஜ.க.வினரையும், கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்வது தொடா்பாக ஜெ.பி.நட்டா வருகையின்போது ஆலோசனை நடத்தப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.






