என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போர் சூழல் தேவையா என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்- திருமாவளவன்
- பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இது ஒரு பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
- இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
மதுரை:
கேரள மாநிலம் வண்டிப் பெரியாரில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
இன்று மே 1, உலக தொழிலாளர் நாள். உழைக்கும் பாட்டாளி வர்க்கம் மீட்சி பெறுவதற்காக. உலக தொழிலாளர் தமது வாழ்வா தார உரிமைகளை பெறுவதற்காக அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் போராடியபோது அன்றைய ஆட்சியாளர்களால் கட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்திய தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கான 28 சட்டங்களை கொண்டு வந்தவர். இந்த நாளில் அம்பேத்கரையும் நினைவுகூர்ந்து அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நன்றி செலுத்துகிறது. உலகத் தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, ஏகாதி பத்திய சுரண்டலுக்கு எதிராக போராட வேண்டும் என்பதுதான் இன்றைய தேவையாக இருக்கிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற பா.ஜ.க. அரசு 2029-ல் பதவி காலத்தை நிறைவு செய்தது. ஆனால் அடுத்த கணக்கெடுப்பு 2031 நடை பெறும் என தெரிய வருகிறது. 2021-ல் நடைபெற வேண்டியது கொரோனா காரணமாக 2031 ஆம் ஆண்டு தான் அந்த காலக்கெடு வருகிறது.
அப்போது பா.ஜ.க. ஆட்சியில் இருக்குமா? என்கிற கேள்வி எழுகிறது. 2029 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் உறுதியாகும். இப்போது இவர்கள் இந்த அறிவிப்பை செய்திருப்பது ஒரு கண்துடைப்பாகத்தான் தெரிகிறது. பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் இது ஒரு பேசும் பொருளாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிறுத்தி பரப்புரை செய்து வருகிறார். இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை அமைச்சர வையில் பா.ஜ.க. அரசு அறிவித்திருக்கிறது. ஏற்க னவே இது குறித்து அவர்கள் எதிர் நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில் இப்போது வந்திருக்கிறார் கள் என்ற நிலையில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாட்டை சேர்ந்த சில கட்சிகள் மாநில அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துகிற அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு தான் இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது சுட்டிக் காட்டி வந்திருக்கிறது.
மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதை உறுதிப்ப டுத்தி இருக்கிறார். தமிழ்நாட் டில் மாநில அரசுதான் இதை மேற்கொள்ள வேண்டும் என சொன்ன வர்கள் எந்த கருத்தையும் சொல்லவில்லை. வருகிற மே 31-ந்தேதி மதச்சார் பின்மைக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்துகிற பா.ஜ.க.வை கண்டித்து வகுப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். லட்சக்கணக்கில் தொண்டர் கள் பங்கேற்க இருக்கி றார்கள்.
பெஹல்காம் நகரில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலை மிகுந்த துய ரத்தை அளிக்கிறது. பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விரைந்து தாயகம் திரும்பினார். டெல்லிக்கு வந்து அமைச்சர்களுடன் கலந்தாய்வு நடத்திவிட்டு பீகாருக்கு சென்று விட்டார் என்பது அதிர்ச்சி இருக்கி றது. அந்த பயங்கரவாதத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது, கடுமைாக கண்டிக்கிறோம்.
தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதை காரணம் காட்டி நாட்டில் ஒரு பதற்றத்தை பா.ஜ.க.வினர் உருவாக்கி வருகிறார்கள். பா.ஜ.க. அரசு பாகிஸ்தானோடு போர் நடத்துவோம் என்கிற வகையில் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். சிந்து நதியை பாகிஸ்தான் பயன்பாட்டிற்கு விடமாட்டோம், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என்கிறார்கள். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் சிந்துநதி பாகிஸ்தானுக்கு வரவிடாமல் தடுக்கப்பட்டால் நாங்கள் இந்தியாவிற்கு போர் தொடுப்போம் என்று சொல்லக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது.
பயங்கரவாதத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து தேவையில்லை. ஆனால் அதற்கு ஒரு போர் தேவையா என்பதை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






