என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலத்தில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
- குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது.
- வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி, மெயின் அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், முகூர்த்த நாள் என்பதாலும் தென்காசியில் திருமண நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்ள வருகை புரிந்த வெளியூர் நபர்கள் பலரும் குற்றால அருவிகளில் அலைமோதினர். அவர்கள் காலை முதலே குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குற்றாலம் வருகை புரிந்தனர்.
குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் காலை முதல் வெயிலும் இதமான காற்றும் வீசி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலத்தில் உள்ள பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






