என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் மாணவர்களிடம் அநாகரீகமாக நடந்த அரசு பள்ளி ஆசிரியா் சஸ்பெண்டு
- பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனா்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் கணித ஆசிரியர் சுந்தர வடிவேல் 7-ம் வகுப்பு மாணவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடந்து பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர வடிவேலை போலீசார் கைது செய்தனா். இந்த நிலையில் அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அதிகாரி உதயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






