என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் விவசாய நிலத்தில் கியாஸ் குழாய் அமைப்பதை கைவிட வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- முத்தூர் முதல் தேவனகொந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கியாஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது.
- சாலையோரம் கியாஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்பொழுது ஐ.டி.பி.எல். பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே மீண்டும் கியாஸ் பைப் பதிக்கின்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில், இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விவசாய நிலங்களில் வழியாக பைப் லைன் அமைக்க முயற்சியை எடுக்கின்றன.
முத்தூர் முதல் தேவனகொந்தி வரை 290 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையின் ஓரமாக கியாஸ் பைப் லைன் பதிக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே கோவை மாவட்டம் இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோமீட்டர் தூரத்திற்கும் சாலையோரம் கியாஸ் பைப் லைன் அமைக்க அரசாணை இருந்தும் நிறுவனம் விவசாய நிலத்திலேயே அமைக்க கடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத்திட்டத்தை ஐ.டி.பி.எல்.நிறுவனம் கைவிட்டு மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






