என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும்
    X

    மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும்

    • மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    இச்சேவைகளை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வரும் 21-ந்தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×