என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் தீவிபத்து
    X

    சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் தீவிபத்து

    • குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின.
    • குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டிபுரத்தில் பட்டசு குடோனில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குடோன் முற்றிலும் எரிந்து சேதமானது.

    குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.

    குடியிருப்பு பகுதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த குடோனில் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. மேலும் குடோன் உரிமையாளர் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    குடோனில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×