என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தீவிபத்து
- தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது.
- தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. பல மணி நேரமாக பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
3 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்து வரும் நிலையில் மற்ற இடங்களுக்கும் பரவாமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் கோடிக்கணக்கான பொருட்கள் சேதமானதாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் பல வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
Next Story






