என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    3 மணி நேரம் நகராமல் இருக்கும் ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
    X

    3 மணி நேரம் நகராமல் இருக்கும் ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்

    • புயல் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்.

    சென்னையை மிரட்டிய ஃபெஞ்சல் புயல் நள்ளிரவில் மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும் போது..,

    "ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க துவங்கியது. நேற்றிரவு (நவம்பர் 30) 10.30 மணி முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடந்தது. இது தொடர்ந்து புதுச்சேரி அருகில் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் இந்த புயல் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது."

    "கடந்த மூன்று மணி நேரத்தில் இந்த புயல் பெரும்பாலும் நகராமலேயே உள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறையக்கூடும்."

    "இதுவரை பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அதிகனமழையும், ஆறு இடங்களில் மிக கனமழையும், 20 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது."

    "புதுச்சேரியில் 46 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி புதுச்சேரியில் 21 செ.மீ. மழை பதிவாகி இருந்தது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×