என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடும்பக் கட்சி எது, பாடுபடும் கட்சி எது என மக்களுக்கு தெரியும்: எடப்பாடி பழனிசாமி
- மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
- அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றார் எடப்பாடி பழனிசாமி.
திருச்சி:
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், துறையூர் தொகுதி, திருச்சி சாலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அதிமுக ஆட்சியின் திட்டங்களால் விவசாயிகள் நன்மை பெற்றுள்ளனர். திமுக ஆட்சியால் விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 2 முறை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
விவசாயிகளின் பிரச்சனைகளை அனுபவ ரீதியில் உணர்ந்தவன் நான். இன்றும் என்னுடைய தொழில் விவசாயம்தான். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்கள் கொடுத்தோம். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்.
அதிமுக தொண்டர்கள் ரத்தத்தை வியர்வையாக சிந்தி ரகுபதியை எம்.எல்.ஏ ஆக்கினார்கள். ஆனால், அவர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்ததாகச் சொல்கிறார். நான் நிரபராதி என்று விடுதலையாகி இங்கு நிற்கிறேன்.
திமுக அமைச்சர்கள், முதலமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு தில்லு திராணியிருந்தால் நீதிமன்றத்தில் வழக்கை நடத்துங்கள்.
கிட்னி விவகாரத்தில் எம்.எல்.ஏ. நக்கலாகப் பேசுகிறார். இப்படி நக்கலாக பேசவா ஓட்டு போட்டு மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? குடும்பக் கட்சியாக உள்ளது திமுக; மக்களுக்காக பாடுபடும் கட்சி அதிமுக மட்டுமே என தெரிவித்தார்.






