என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி
    X

    அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி.
    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைய தினம் ஊடகத்தில் பார்த்தபோது அமைச்சர் ரகுபதி எடப்பாடி பழனிசாமி தூங்கிக்கொண்டு இருப்பது போல பேட்டி அளித்துள்ளார் என்று கூறி உள்ளார். நான் விழித்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால்தான் பொறுத்துக் கொள்ள முடியாத ரகுபதி ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். ரகுபதி பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொடுத்தடிமையாக செயல்பட்டு வருகிறார். ரகுபதியை நாட்டிற்கு அடையாளம் காட்டியது அ.தி.மு.க. இன்று நன்றியை மறந்து அடிமை குரல் கொடுத்து கொண்டு வருகிறார்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரைக்கும் மக்களுக்காக சேவை செய்கின்ற கட்சி. மக்களுக்காக உழைக்கின்ற கட்சி. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாமலும் மக்கள் பணிகளை முதன்மையாக செய்கின்ற கட்சி என்றால் அ.தி.மு.க. தான்.

    தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக விளங்கி கொண்டிருக்கின்றது என சொல்லுகிறார்.

    போலீஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனம் திருட்டு போனது குறித்து புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடு, நான் அந்த இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருகிறேன் என போலீசார் ஒருவர் கூறுகிறார். அதற்கு அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என்றார். உடனே காவலர் அந்த பெண்ணை அவதூறாக பேசுகிறார். இதையாவது பார்த்து முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆகவே இந்த ஆட்சியின் லட்சணத்தை மக்கள் பார்க்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    நான் ஏற்கனவே டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தபோது தமிழகத்திற்கு தேவையான நிதி பல துறைகளுக்கு வராமல் நிலுவையில் இருக்கின்றது. இந்த நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தேன். அதன் விளைவாக 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கான தேவையான நிதியை விடுவித்து இருக்கிறார். அதோடு மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2-க்கான நிலுவை நிதி வழங்க வேண்டும் என்றோம். அதையும் ஒதுக்கீடு செய்திருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அதையும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

    ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு தேவையான நிதி பெற்று தருவதிலும், தமிழ்நாடு வளர்வதற்கு எப்போதும் நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

    அ.தி.மு.க. ஆட்சியில் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டது. இன்றைக்கு ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்களுடைய பிரச்சனை கவனிப்பதில்லை. இனியாவது இந்த அரசு விழித்து கொண்டு இந்த குறைபாடுகளை நீக்க வேண்டும்.

    கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி முதலில் பா.ஜனதாவுடன் எங்கள் கூட்டணி அமைந்திருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் காலம் இருக்கின்றன. இன்னும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும்.

    தி.மு.க. ஆட்சியில் 4 ஆண்டுகளில் அரசு பணியிடங்கள் சுமார் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதுபோல் அரசு துறை சார்ந்த பணியிடங்கள் 28 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆட்சி நிறைவடைந்து 4 ஆண்டுகள் ஆகி 5-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையின்போது அறிவித்த 5½ லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பவில்லை.

    பொது விநியோகத் திட்டம் என்பது முக்கியமான திட்டம் ஏழை எளிய மக்கள் நடுத்தர மக்கள் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை பெறுகின்றனர். இதில் பணியாளர்கள் அவ்வப்போது காலியாகும் போது நிரப்பப்பட வேண்டும் புதிய ரேஷன் கடை திறக்கும் போது அதற்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும் இதைப் பற்றி இந்த அரசு கவலைப்படுவதில்லை. மக்களை பற்றி கவலைப்படாத ஒரே அரச தி.மு.க. ஆட்சி. ஆனால் வெளியில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் தான் மிக சிறப்பாக செயல்பட்டதாக வெளிப்படுத்துவார்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற தோற்றத்தை வெளியிட்டு வருவது திமுக அரசாங்கம்.

    சட்டமன்றத்தில் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை ஒளிபரப்பவும் எனக் கூறினார்கள். ஆனால் நாங்கள் பேசுவது அவர்கள் வெளியிடுவதே இல்லை. நீதிமன்றம் சென்றோம் அங்கும் நியாயம் கிடைக்கவில்லை முதலமைச்சர் அமைச்சர்கள் பேசுவதை காட்டுகிறார்கள் எதிர்க்கட்சியினர் பேசுவதை காட்டுவதில்லை. அந்த அளவுக்கு மக்கள் பிரச்சனைகளை நாங்கள் எடுத்து பேசி இருக்கிறோம் அதை காட்ட மறுக்கிறார்கள் அதற்கான பதிலை மட்டும்தான் ஒளிபரப்புவார்கள். அங்கேயே அதற்கு நீதி கிடையாது.

    பஹல்காமில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவின் மக்களை நிலைகுலைய செய்தது. அனைத்து மக்களிடத்திலும் வேதனையான சம்பவம் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம். அதற்கு இந்திய அரசு உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் பயங்கரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் வேரோடு அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு நமது முப்படைகளும் ஒன்றாக இணைத்து அதற்கு முழு அதிகாரம் வழங்கி அதனடிப்படையிலேயே பயங்கரவாதம், பயங்கரவாத முகாம்களை அண்டை நாட்டில் இருந்தாலும் முழுமையாக செயல்பட்டு அளித்துள்ளனர். முற்றிலும் ஒலிக்கும் விதமாக முதல் கட்ட பணியை தொடங்கியுள்ளனர் அதற்காக அ.தி.மு.க. வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் நம்ம ராணுவத்திற்கு முப்படைகளுக்கும் மிகத் திறமையாக துல்லியமாக தீவிரமாக போரிட்டு வெற்றி கண்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×