லாட்டரி அதிபர் மார்ட்டின், மருமகன் வீடுகளில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.
தொழில் அதிபர் மார்ட்டினின் வீடு - ஆதவ் அர்ஜூனா
தொழில் அதிபர் மார்ட்டினின் வீடு - ஆதவ் அர்ஜூனா
Published on

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா வீட்டில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து கோவையில் உள்ள லாட்டரி மார்ட்டின் வீட்டிலும், அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com