என் மலர்
நீங்கள் தேடியது "lottery martin"
- கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது.
- பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார்.
புதுடெல்லி:
கோவையை பூர்வீகமாக கொண்ட லாட்டரி மன்னன் என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின், லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்ததாக, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த 2014-ம் ஆண்டு விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் அவருக்கு லாட்டரி விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடிவரை வருமானம் கிடைப்பதாக தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மார்ட்டினுக்கு லாட்டரி மோசடி மூலம் அதிகப்படியான லாபம் கிடைத்து உள்ளது. இதனை அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளார். மேலும் கொச்சி, கொல்கத்தாவில் தனியார் நிறுவனங்களை தொடங்கி, அவற்றின் மூலம் லாட்டரி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுதொடர்பாக அவருக்கு எதிராக 4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
அதாவது கடந்த 2014-ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்கும், கொல்கத்தா போலீசார் 2 வழக்குகளும் தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொண்டது. தொடர்ந்து லாட்டரி முறைகேடு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.1500 கோடிஅளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மேகாலயா அரசு கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மார்ட்டினுக்கு சொந்தமாக உள்ள கோவை, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ.12 கோடி ரூபாயை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் துபாய், லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.6.4 கோடி மதிப்பில் பணத்தை முதலீடு செய்து உள்ளார் என்பதும் தெரியவந்து உள்ளது.
மார்ட்டின் லாட்டரி தொழிலில் முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததால் மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசியல்கட்சிகள் மூலம் நெருக்கடி வரலாம் என்பதை மார்ட்டின் உணர்ந்திருந்தார். தொடர்ந்து அவர் மேற்கண்ட மாநிலங்களில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம்கோடி-கோடியாக பணத்தை வாரி இரைத்து உள்ளார்.
அதாவது கடந்த 2019-ம்ஆண்டு முதல் 2024-ம் ஆண்டுவரை மார்ட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ரூ.1368 கோடி வரை பணம் வழங்கியதற்கான ஆதாரங்களை அமலாக்கப்பிரிவு சேகரித்து உள்ளது.
மேற்கு வங்காளத்தில் மம்தா கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1592 கோடியை வழங்கிய மார்ட்டின், தனக்கு சொந்தமான தனியார் நிறுவனம் மூலம் ரூ.542 கோடியை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில் ஜெகன்மோகன் கட்சிக்கு ரூ.154 கோடி, பாஜகவுக்கு ரூ.100 கோடி, காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடி என்று தேர்தல் பத்திரங்கள் மூலம் மார்ட்டின் பணத்தை அள்ளி வீசியது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மூலம் தெரிய வந்து உள்ளது.
நாடு தழுவிய அளவில் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதற்காக மார்ட்டின் 350-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களை தொடங்கி உள்ளார். மேலும் பல்வேறு சிறப்பு வாகனங்களை பயன்படுத்தி விற்பனை முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு மாநிலங்களில் வினியோகஸ்தர்களை நியமித்து உள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் மார்ட்டினுக்கு சொந்தக்காரர்கள் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கில் பரிசு அறிவிக்கப்பட்ட லாட்டரி சீட்டு அடங்கிய பண்டல்களை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் இந்திய அளவில் லாட்டரி விற்பனை மூலம் மார்ட்டினின் நிறுவனத்துக்கு ஆண்டுதோறும் ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இருப்பினும் அவர் குறைந்த அளவே வருவாய் கிடைத்ததாக கணக்கு காட்டி ஏமாற்றி வந்தது அமலாக்கப்பிரிவு விசாரணை மூலம் தெரியவந்து உள்ளது.
சிக்கிம் மாநில லட்டரி மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்த மார்ட்டினுக்கு மேற்குவங்காள மாநிலத்தில் இருந்து 90 சதவீதம் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கேரளா, பஞ்சாப், கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கும் லாட்டரி தொழிலை விரிவுபடுத்தி பில்லியன் கணக்கில் பணத்தை சம்பாதித்தது தொடர்பாக அமலாக்கபிரிவு அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாட்டரி மார்டினின் வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டது.
- இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி மார்டினுக்கு சொந்தமான 22 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர்.
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.12.41 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் வங்கி வைப்புத்தொகை ரூ.6.42 கோடி முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
- கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர்.
- மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:
கோவையை சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இவர் சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த ஆண்டு 2 முறை மார்ட்டின் வீடு, அவருடைய அலுவலங்களில் வருமான வரிசோதனை நடத்தினர். அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்றுமுன்தினம் முதல் சென்னை, கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று 2-வது நாளாக கோவை, சென்னையில் சோதனை நடந்தது. இதற்கிடையே சென்னையில் உள்ள மார்ட்டின் அலுவலகத்தில் இருந்து ரூ.8 கோடியே 80 லட்சம் சிக்கியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று 3-வது நாளாக கோவையில் உள்ள மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் மருத்துவக்கல்லூரியில் சோதனை நடந்தது. இதேபோன்று மார்ட்டினின் உறவினர்களான கோவை சிவானந்தபுரத்தில் உள்ள ஜான் பிரிட்டோ என்பவரது வீடு, சிவானந்தா காலனியில் உள்ள அந்தோணியா ஆகியோரது வீடுகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1,300 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபலமானவர் கோவையை சேர்ந்த மார்ட்டின்
- மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை பெரும் நடைமுறையை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தடை செய்தது. மேலும் இந்த நடைமுறை மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற அறிக்கையில் வெளியாகியது.
அதன்படி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1,300 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து பிரபலமானவர் கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
மார்ட்டின், லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ. 910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கோவையில் உள்ள மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன், உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதனிடையே, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரது மருமகன் ஆதவ் அர்ஜூனாவிற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை, கோவை, அரியானாவின் பரிதாபாத், பஞ்சாப்பின் லூதியானா, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
- சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை:
கோவையை சேர்ந்தவர் தொழில் அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
அவர் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரூ.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் மார்ட்டினின் ரூ.450 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபரில் கோவை, சென்னையில் உள்ள மார்ட்டின், அவருடைய மருமகன், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று சென்னை மற்றும் கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பகுதியில் இருக்கும் மார்ட்டின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் நடத்தி வரும் ஹோமியோபதி கல்லூரி உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. காலையில் தொடங்கிய சோதனையானது இரவு தாண்டியும் நீடித்தது.
இன்று காலை 2-வது நாளாக, வெள்ளக்கிணர் பகுதியில் உள்ள மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையையொட்டி அவரது வீட்டின் நுழைவு வாயில் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பூட்டப்பட்டது. வீட்டில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் இன்றும் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோல் வீட்டின் அருகே உள்ள அலுவலகம் மற்றும் மார்ட்டின் நடத்தி வரக்கூடிய ஹோமியோபதி கல்லூரியிலும் 2-வது நாளாக சோதனை நடந்தது.
கல்லூரியில் உள்ள அலுவலக அறைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சரவணம்பட்டி மற்றும் சாய்பாபாகாலனியில் உள்ள மார்ட்டினின் உறவினர்கள் 2 பேர் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சில ஆவணங்கள் கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தது என்பது உறுதியாக தெரியவில்லை.
இந்த வழக்கு தொடர்பான சோதனைகள் முழுமை அடைந்த பின்னர் என்னென்ன ஆவணங்கள் சிக்கின என்ற அதிகாரபூர்வ தகவலை அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
சோதனையையொட்டி, சோதனை நடைபெற்று வரும் 3 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
- சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினின் வீடு, அலுவலகம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள சொகுசு பங்களாவில் வசிக்கும், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீடும் மீண்டும் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா வீட்டில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து கோவையில் உள்ள லாட்டரி மார்ட்டின் வீட்டிலும், அலுவலகத்திலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோத பண பரிமாற்ற புகாரின் அடிப்படையில் தீவிர சோதனை நடந்து வருகிறது.
- மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- லாட்டரி மார்ட்டினின் இல்லம், அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை:
கோவையை சேர்ந்தவர் லாட்டரி அதிபர் மார்ட்டின். இவர் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். மருத்துவ கல்லூரியும் நடத்தி வருகிறார். துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பிரிவில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாத படி பூட்டினர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.
தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தெரிகிறது. மார்ட்டின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள அறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.
சோதனையின் போது அலுவலகத்தின் நுழைவு வாயில், மற்றும் அலுவலக அறைகளின் கதவுகளையும் அடைத்திருந்தனர்.
இதேபோல் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
சோதனையொட்டி கல்லூரிக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர்.
கோவையில் மார்ட்டின் வீடு, அலுவலகம், மருத்துவக்கல்லூரி என மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடந்தது.
அமலாக்கத்துறை சோதனையையொட்டி சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனை முடிவுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
கோவையில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் கேஷியர் பழனிச்சாமியிடம் வருமான வரி சோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பழனிச்சாமி கடந்த 3-ந்தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் தனது தந்தை பழனிச்சாமி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட கோரியும், மறு பிரேத பரிசோதனை செய்யக் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் தந்தை பழனிச்சாமி போலீஸ் காவலிலோ, வருமான வரித்துறை அதிகாரிகளின் காவலிலோ இருந்த போது மரணம் அடையவில்லை. அதேநேரம், பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. காரமடை போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கின் விசாரணை, மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘இறந்து போன பழனிச்சாமியின் உடல் தற்போது எங்கு உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளதாக அரசு வக்கீல் கூறினார்.
இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி, பாதுகாப்பாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #MadrasHC #LotteryMartin