என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்...
    X

    ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்...

    • நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 200 பக்க தீர்ப்பின் நகலை ஞானசேகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்.
    • 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-

    பி.என்.எஸ். 329 அத்துமீறி அண்ணா பல்கலைக் கழகத்துக்குள் நுழைதல்-3 மாத சிறை தண்டனை.

    பி.என்.எஸ். 126(2)-அனுமதியின்றி ஒருவர் மீது பலத்தை பயன்படுத்தி, காயம் ஏற்படுத்துதல்-ஒரு மாத சிறை தண்டனை

    பி.என்.எஸ். 87-பெண்ணை கடத்தி துன்புறுத்துதல்-10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம். அபராதம் கட்ட செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ். 127(2)-சட்டவிரோதமாக பிடித்து வைத்து துன்புறுத்துதல்-ஒரு ஆண்டு சிறை தண்டனை

    பி.என்.எஸ். 75(2) பாலியல் தொந்தரவு செய்தல்-3 ஆண்டு சிறை தண்டனை

    பி.என்.எஸ். 76-நிர்வாணமாகி உடல் ரீதியாக துன்புறுத்துதல்-7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ். 64(1) பாலியல் தாக்குதல்-30 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ரூ.25 ஆயிரம் அபராதம். இதை செலுத்த தவறினால் 3மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ்.351(3)-நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்று மிரட்டுதல்-7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

    பி.என்.எஸ். 238 (பி) குற்றத்தை மறைத்தல்-3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்- அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை

    தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 இ-ஆபாசமாக படம் பிடித்து பிறருடைய தனியுரிமையை மீறுதல்-3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

    இதனிடையே, நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 200 பக்க தீர்ப்பின் நகலை ஞானசேகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.

    Next Story
    ×