என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
    X

    இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    • தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.
    • வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.

    ஜெர்மனியில் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * ஜெர்மனி உடனான பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வாருங்கள்.

    * வரலாற்று பெருமைகள் கொண்ட தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்.

    * தமிழ்நாடு பொருளாதரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.

    * நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் ஜெர்மனி வலிமையாக உள்ளது.

    * 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு கொண்ட மாநிலத்திற்கு தொழில் தொடங்க அழைக்கிறேன்.

    * பொருளாதாரத்தில் தமிழ்நாடு- ஜெர்மனி இடையே பாலம் அமைக்கவே தான் வந்துள்ளேன்.

    * தொழில்துறையில் ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி உள்ளது.

    * தமிழ்நாட்டிற்கு முதலீடு செய்ய வருவோருக்கு உகந்த சூழல் உறுதி செய்யப்படும்.

    * Made in Tamilnadu என்பது தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி உள்ளது.

    * ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்க முடியும்.

    * 54 லட்சம் MSME நிறுவனங்கள், முன்னணி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    * இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார்.

    Next Story
    ×