என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.
    • தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.

    மதுரையில் 'தமிழ்நாடு வளர்ச்சி' என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    * ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டியது அவசரம் என உணர்ந்தோம்.

    * உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்தேன்.

    * தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியம்.

    * பரவலான வளர்ச்சி என்பதை எங்களது செயல்கள் மூலம் நிரூபித்து காட்டியிருக்கிறோம்.

    * முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கினோம்.

    * புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 80 சதவீத முதலீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் கேட்டார் என்பதற்காக யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்.

    * மாநிலத்தில் பல்வேறு விவகாரங்களை ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்வது குறித்து முடிவு செய்வர்.

    * மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் கூறவேண்டும்.

    * கோவில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை.

    * இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுத வேண்டும்.

    * தொழில் முதலீட்டிற்கு தேவையான கட்டமைப்புகள் மதுரையில் உள்ளன.

    * தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    * விருதுநகரில் உருவாகி வரும் ஜவுளி பூங்காவால் 1 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை.

    * தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் மையமாக மதுரை மாறி வருகிறது என்றார்.

    Next Story
    ×