என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள்: ஸ்டாலின் என பெயர் வைத்தது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்
- சிலர் வடமொழி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். யாரையும் நான் குறைகூறவில்லை.
- ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் திரு.வி.க. நகரில் ரூ.21.50 கோடியில் கட்டப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகையை திறந்துவைத்த முதலமைச்சர் 10 இணையருக்கு திருமணம் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள்.
* சிலர் வடமொழி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுகிறார்கள். யாரையும் நான் குறைகூறவில்லை.
* கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் கலைஞர் வைத்திருந்த நம்பிக்கையில் தான் எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டப்பட்டது.
ஸ்டாலின் என்பது தமிழ் பெயர் இல்லை என சிலர் கூறும் நிலையில் அது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.
Next Story






