என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் நிறுத்தம்
- சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- மார்ச் மாதம் 2-ந்தேதி இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் மூலம் தினந்தோறும் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் 2 நாட்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, வரும் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 10 மணி முதல் மார்ச் மாதம் 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி வரை சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






