என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் 18-ந்தேதி தாக்கல்- புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
    X

    சென்னை மாநகராட்சி பட்ஜெட் 18-ந்தேதி தாக்கல்- புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு

    • கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது.
    • புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வருகிற 18-ந்தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அப்போது, சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர் பட்ஜெட் மீது ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர், தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும்.

    கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் ரூ.8,404 கோடியாக இருந்தது. இதேபோல, 300 பூங்காக்கள் சீரமைப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட 62 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

    சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய மேம்பாலங்கள், மழைநீர் வடிகால் பணி, பெண்களுக்கான புதிய திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளது. கல்வி, சாலை வசதி, போக்குவரத்து, மழை நீர் வடிகால் உள்ளிட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×