என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், தமிழகத்திலும் தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
Next Story






