என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு
    X

    விக்கிரவாண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு

    • தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
    • விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் சாலை மைய தடுப்பு மற்றும் லாரி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    சென்னை கொளத்தூரில் இருந்து கேரளாவுக்கு காரில் பயணம் செய்த சம்சுதீன், ரிசி, மோகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவரும் காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×