என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்ஜெட்டில் அறிவித்தபடி காலை உணவுத் திட்டம் ஜூன் 3-ந்தேதி விரிவாக்கம்
    X

    பட்ஜெட்டில் அறிவித்தபடி காலை உணவுத் திட்டம் ஜூன் 3-ந்தேதி விரிவாக்கம்

    • ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.
    • இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட்டது.

    முதல் கட்டமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

    அதன் பிறகு ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

    நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது.

    பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதியில் இருந்து காலை உணவு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×