என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- சோதனையால் விமானங்கள் தாமதம்
    X

    சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- சோதனையால் விமானங்கள் தாமதம்

    • இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலைய மேலாளர் அறைக்கு நேற்று வந்த ஒரு மர்ம இ-மெயில் தகவலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த இமெயில் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரபடுத்தப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு சோதனையும் அதிகரிக்கப்பட்டது. இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது.

    இந்த பரிசோதனைகள் காரணமாக சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு இன்று புறப்பட்டு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. ஹாங்காங், பிராங்க் பார்ட், குவைத், துபாய், சார்ஜா, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், லண்டன் உள்ளிட்ட விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன.

    Next Story
    ×