என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலத்தில் 7-வது நாளாக குளிக்க தடை... சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வருகிறது.
- அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தென்காசி:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் கடந்த 1 வாரத்துக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. மலை அடிவார பகுதி மற்றும் நகர் பகுதிகளிலும் சாரல் மழை அவ்வப்போது பெய்து கொண்டிருந்தது.
இதனால் 2 மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
பாதுகாப்பு கருதி இன்று 7-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை குறைந்து நீர்வரத்து சீரானதும், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.






