என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
    • அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் இரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றும் இன்று காலையிலும் தொடர்ந்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடையானது நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் பலர் குற்றால அருவிகளில் குளித்து விடலாம் என எண்ணி வந்திருந்து ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் அருவி கரைகளில் தூரத்தில் நின்று தங்களின் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, மதிய நேரத்தில் தண்ணீர் வரத்து சீரானதை அடுத்து அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    Next Story
    ×