என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
    X

    சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

    • தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்.
    • ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி இன்று வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மழை இல்லாததால் பட்டாசு விற்பனை அமோகமாக நடந்தது.

    சென்னை தீவுத்திடலில் குடும்பம் குடும்பமாக சென்று பட்டாசு வாங்கி சென்றனர். அவ்வப்போது மழை சிறிது நேரம் பெய்தாலும் உடனே நின்றதால் தீபாவளி பட்டாசு விற்பனை களை கட்டியது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் கடைசி நேரத்தில் பட்டாசு விற்பனை சூடு பிடித்தது.

    கடந்த 3 நாட்களில் சென்னையில் பட்டாசு வெடித்ததன் மூலம் 151 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. 15 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 17 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா 12 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    Next Story
    ×