என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சி சிறுகனூர் அருகே 10 கிலோ தங்கம் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
- மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
- நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.
திருச்சி:
சென்னை சவுகார்பேட்டையில் பிரபல ஆர்.கே. ஜுவல்லரி அமைந்துள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளுக்கு ஆபரண தங்கம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஆர் கே ஜுவல்லரி மேலாளர் கடந்த 8-ந் தேதி சென்னையில் இருந்து கிலோ கணக்கில் ஆபரண தங்கத்தை எடுத்துக் கொண்டு காரில் திண்டுக்கல் சென்றார்.
பின்னர் அங்கு சில கடைகளுக்கு ஆபரண நகைகளை விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள 10 கிலோ தங்கத்துடன் நேற்று இரவு 3 ஊழியர்களுடன் சென்னை திரும்பினர்.
திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சமயபுரம் அருகே உள்ள கொணலை பகுதியில் சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடி தூவி, காரின் கண்ணாடியை உடைத்து அதில் வைத்திருந்த 10 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பி சென்றனர். உடனடியாக நகைக்கடை மேலாளர் சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து 10 கிலோ ஆபரண தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மற்றும் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






