என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து வீடியோ எடுத்தவர் கைது: மேலும் 2 பேருக்கு வலைவீச்சு
- போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர்.
- நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்கச்செய்து அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்ததும் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் போலீஸ் நிலைய போலீசார் நேற்று முன்தினம் டவுன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது டவுன் அன்னை வேளாங்கண்ணிநகர் தென்புறம் உள்ள வயல்காட்டு பகுதியில் வாலிபர்கள் சிலர் நின்றுகொண்டு இருந்தனர்.
இதை பார்த்த போலீசார் அங்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அதில் ஒருவர் பிடிபட்டார். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் டவுன் அரசன் நகரை சேர்ந்த காளியப்பன் மகன் ரஞ்சித் (வயது 19) என்பதும் தப்பி சென்ற நபர்கள் ரஞ்சித்தின் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை தூக்கி வீசி வெடிக்கச்செய்து அதனை தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ரஞ்சித்தின் நண்பர்களான கிருஷ்ணபேரியை சேர்ந்த மாரிசெல்வன் என்ற சல்மான், தவுபிக் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். வாலிபர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்