என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
உடலில் மின்சாரம் பாய்ச்சி தொழிலாளி தற்கொலை: கள்ளக்காதலியை கணவர் அழைத்து சென்றதால் விபரீத முடிவு
- கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வெங்கடேசன் மிகவும் மனவருத்தம் அடைந்தார்.
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
திருவள்ளூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் பாக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்க டேசன்(வயது45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டார்.
இதைத்தொடர்ந்து வெங்கடேசனுக்கு சென்னையில் வேலை பார்த்த போது திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு கள்ளக்காதலியை அழைத்து வந்து திருவள்ளூரை அடுத்த ராமதண்டலம் கிராமத்தில் தங்க வைத்து கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை, அவரது கணவர் சமாதானம் பேசி அழைத்து சென்றுவிட்டதாக தெரிகிறது. கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வெங்கடேசன் மிகவும் மனவருத்தம் அடைந்தார். அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடியவில்லை. இந்நிலையில் நேற்று இரவு ராம தண்டலம் ஏரி அருகே உள்ள கரிசூலை பகுதிக்கு வெங்கடேசன் வந்தார்.
திடீரென அவர் அங்கு போடப்பட்டிருந்த மின்விளக்கின் வயரை துண்டித்து அதனை பிடித்தபடி தனது உடலில் மின்சாரத்தை பாய்ச்சினார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரம் என்பதால் வெங்கடேசன் இறந்து கிடந்தது அப்பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள் வெங்கடேசன் மின்வயரை பிடித்தபடி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்