search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செங்கோடு பெண் வி.ஏ.ஓ தற்கொலை செய்தது ஏன்?- கணவரிடம் விசாரணை
    X

    திருச்செங்கோடு பெண் வி.ஏ.ஓ தற்கொலை செய்தது ஏன்?- கணவரிடம் விசாரணை

    • நவீனாவை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குன்னமலை அருகே சிக்கிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த வேலன் மகன் பொன்னுசாமி (வயது 37).

    இவர் நாமக்கல் அருகே தொட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் கணபதி பாளையம் அருகே எடக்காடு செம்பாகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகள் நவீனா (32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மௌனகிருத்திக் (4) என்ற மகன் உள்ளார்.

    நவீனா திருமணத்தின்போது காரைக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். பிறகு பணி மாறுதல் பெற்று, திருச்செங்கோடு தாலுகா பிரிதி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று காலையும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் பொன்னுசாமி பணிக்கு சென்றுவிட்டார். நவீனா மட்டும் தனியாக வீட்டில் விரக்தியில் இருந்துள்ளார். இதையடுத்து தனது சேலையால் விட்டதில் தூக்குபோட்டு கொண்டார்.

    இதை பார்த்த அவரது மாமியார், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் நவீனாவை மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் நவீனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து நவீனாவின் தந்தை நடராஜன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர்செந்தில்வேல் பெருமாள் வழக்குபதிவு செய்து, நவீனா தற்கொலை செய்தது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், பொன்னுசாமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருப்பது நவீனாவிற்கு தெரியவந்தது. இதனாலேயே கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தனது தந்தைக்கும் தெரியப்படுத்திய, நவீனா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளே ஆவதால், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, நேரில் சென்று இது சம்பந்தமாக கணவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இதில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    கணவன் கள்ளத்தொடர்பாக பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×