search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
    X

    தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

    • தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.
    • பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    * திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    * தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது.

    * பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம். கால்நடைகளையும் இறக்க வேண்டாம்.

    * ஒரு சில பகுதிகளில் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரு வெள்ள அபாயம் எதுவுமில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×