என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு
- நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது
- இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் விநாயகர் சதுரத்தி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்து முன்னணியினர் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஆக்கிரோஷமாக தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலத்தில் யாருடைய விநாயகர் சிலை முதலில் செல்ல வேண்டும் என்பது தொடர்பான தகராறு மோதலாக வெடித்துள்ளது. இந்நிலையில் மோதலை கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
Next Story






