search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விஜயகாந்துக்கு 6 நாட்களாக சிகிச்சை: நலமுடன் இருப்பதாக கட்சியினர் தகவல்
    X

    விஜயகாந்துக்கு 6 நாட்களாக சிகிச்சை: நலமுடன் இருப்பதாக கட்சியினர் தகவல்

    • மூச்சு விடுவதில் விஜயகாந்துக்கு லேசான சிரமம் ஏற்பட்டது.
    • டாக்டர்களின் அறிவுரையின் பேரிலேயே விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு கடந்த 18-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு விஜயகாந்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதற்கிடையே மூச்சு விடுவதில் அவருக்கு லேசான சிரமம் ஏற்பட்டது. இதற்காகவும் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு விஜயகாந்த் வீடு திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இன்று 6-வது நாளாக விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தே.மு.தி.க.வினர் கூறும்போது, "டாக்டர்களின் அறிவுரையின் பேரிலேயே விஜயகாந்த் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×