search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெட்கக்கேடான செயலை செய்த அவரை நாடு மன்னிக்காது: மத்திய மந்திரி ஆவேசம்
    X

    வெட்கக்கேடான செயலை செய்த அவரை நாடு மன்னிக்காது: மத்திய மந்திரி ஆவேசம்

    • துணை ஜனாதிபதி போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
    • அவர்கள் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என்றார் மத்திய மந்திரி.

    சென்னை:

    எம்.பி.க்கள் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து, கிண்டல் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், மத்திய மந்திரி அனுராக் தாக்குர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி முதிர்ச்சி அற்றவர், தீவிரம் காட்டாதவர், ஜனநாயகமற்றவர். வீட்டிலோ அல்லது வெளியிலோ எதுவாக இருந்தாலும், இது வெட்கக் கேடான செயல்.

    அவரது செயலாலோ, பேச்சாலோ பிரதமரை பலமுறை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி செய்த செயலை நாடு மன்னிக்காது.

    ஒரு எம்.பி. தவறான செயலில் ஈடுபட்டிருந்தால், அவருடன் இணைவதை விட அவரை நிறுத்தியிருக்க வேண்டும். மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக, குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என தெரிவித்தார்.

    Next Story
    ×