என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே லாரி மோதி தாய்-மகள் பலி
    X

    காஞ்சிபுரம் அருகே லாரி மோதி தாய்-மகள் பலி

    • காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து ஓரிக்கை நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதி மோதியது.
    • காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பலியான தாய்-மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை, பேராசிரியர் நகரை சேர்ந்தவர் பழனி. இவர் சென்னை தலைமை செயலகத்தில் நிதி துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வித்யா (வயது40). இவர்களது இரட்டை குழந்தைகள் பூர்ணிமா, பூர்விகா (வயது4).

    இன்று அதிகாலை ஓரிக்கை அடுத்த மணி மண்டபம் பகுதியை சேர்ந்த உறவினரின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பழனி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    காந்திநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, உத்திரமேரூரில் இருந்து ஓரிக்கை நோக்கி சென்ற லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மோதி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய வித்யா, அவரது மகள் பூர்ணிமா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பழனி, மற்றும் அவரது மற்றொரு மகள் பூர்விகா ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தனர்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய பழனி, பூர்விகாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து பலியான தாய்-மகளின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் லாரியின் பதிவு எண்ணை வைத்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×