என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா அருகே லாரி மோதி பஸ் டிரைவர் பலி

- வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார்.
- விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவண செல்வன்(வயது43).இவர் மாநகர பஸ்சில் டிரைவராக இருந்தார். இவருக்கு மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் சாலையை கடக்க முயன்றார். அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி திடீரென சரவண செல்வன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவண செல்வன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்த குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
