search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்.. மு.க. ஸ்டாலின் உத்தரவு
    X

    சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம்.. மு.க. ஸ்டாலின் உத்தரவு

    • லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருவான்மியூர் ஆர்.டி.ஒ. அலுவலம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பில் சிவகாமி என்ற தூய்மை பணியாளர் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த கார் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டார். அவர் மீது சரக்கு லாரி ஒன்று ஏறி இறங்கியது. மேலும் லாரி அந்த வழியாக வந்த கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சிக்கிய சிவகாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் சிவகாமியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்தார். இதோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×