search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுரங்கப்பாதை அமைக்ககோரி லாரியை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
    X

    சுரங்கப்பாதை அமைக்ககோரி லாரியை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

    • சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சென்னை, எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை 6 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம், பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம், பெரியபாளையம், வெங்கல் கூட்டு ரோடு வழியாக செல்கிறது.

    இந்நிலையில் பொன்னேரி அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பகுதியில் 6 வழிச்சாலை பணிக்காக கிராமத்தில் உள்ள பிற பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய உள் வட்டச் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் வந்து செல்ல முடியாத வகையில் நிரந்தர தடை ஏற்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சுமார் 20 கிலோ மீட்டர் சுற்றி அப்பகுதி மக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அப்பகு தியில் முதலில் சுரங்கப்பாதை அமைத்து, அதன் பின்னர் 6 வழிச்சாலை பணிகளை தொடங்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சுரங்கப்பாதை அமைக்காமல் சாலைப்பணி தொடர்ந்து நடந்து வந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்கும் பணிக்காக மண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பி டித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலைப் பணியையும் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார், துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ.ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக கடிதம்மூலம் உறுதிமொழி அளித்தனர். இதன்பின்னர் கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×