search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கண்ணபுரம் மாட்டுச்சந்தை கூடியது
    X

    மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கண்ணபுரம் மாட்டுச்சந்தை கூடியது

    • வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.
    • 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த ஓலப்பாளையம் அருகே உள்ள கண்ணபுரத்தில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி அன்று விக்ரமசோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 16-ந் தேதி தேர் முகூர்த்தகால் நடுதலும், 19-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.

    வருகிற 23-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் சாமி ரதத்திற்கு எழுந்தருளலும், பின்னர் மாலை 4.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது.

    கண்ணபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) பூச்சாட்டுலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. 17-ந்தேதி கம்பம் போடுதலும், 25-ந்தேதி பொங்கல் விழாவும், 26-ந்தேதி மறுஅபிஷேகமும் நடைபெற உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த மாட்டுச்சந்தைக்கு கோவை, திருப்பூர். ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, திருவாரூர், திருச்சி, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு புது காங்கேய இன மாடுகளை வியாபாரிகள் வாங்கிச்செல்வார்கள்.

    இது குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது, நேற்று அமாவாசை முடிந்து இன்று பாட்டி அம்மை என்பதால் மாடுகளின் வரத்து குறைவாக உள்ளது. நாளை (புதன்கிழமை) மாடுகளின் வரத்து அதிகமாக இருக்கும் என்றனர்.

    Next Story
    ×